பன்றிக்கு நன்றி சொல்லும் ஹீரோ நிஷாந்த் ரூஸோ!

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில் இயக்குனராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிஷாந்த் ரூஸோ, யார் இவர் என ரசிகர்களின் கவனத்தில் பதியும் விதமாக தனது பங்களிப்பை தந்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ-விற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018ல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாக சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குனர் பாலா அரனிடமிருந்து பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிசனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ. தற்போது அந்தப்படத்திற்கு கிடைத்துவரும் பாசிடிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ.

Actor Nishanth RussoPanrikkuNanriSolli movie