த்ரிஷாவுடன் என்ன உறவு? : ராணா ‘கிரேட் எஸ்கேப்’!

‘9’ ங்கிற நம்பர் எங்களோட பி.வி.பி நிறுவனத்துக்கு ராசியான நம்பர்!

இந்த 2016-ஆம் வருஷத்தை மொத்தமா கூட்டிப் பார்த்தா கூட்டுத்தொகை 9 வருது, ஸோ கண்டிப்பா இந்த 2016-ம் வருஷம் எங்களுக்கு நல்ல வருஷமா அமையும் என்றபடியே பத்திரிகையாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார் ‘பி.வி.பி சினிமாஸ்’ நிறுவனத்தின் ராஜீவ்.

2014-ம் ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசாகி வசூலில் சக்கை போடு போட்ட ‘பெங்களூர் டேய்ஸ்’ படம் தான் தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற சிறிய பெயர் மாற்றத்தோடு தயாராகியிருக்கிறது.

தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் தமிழரான ‘பொம்மரில்லு’ ( தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்ரமணியம் ) பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார்.

”ஒரு நேரடிப்படம் மூலமாக தமிழ்ல ஒரு படம் பண்ணனும்னு ஆசை எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. ஆனால் தெலுங்குல தொடர்ந்து ஹிட் கொடுத்ததால அந்தப் பக்கம் பிஸியாயிட்டேன். இப்போதான் ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு.

இது ரீமேக் படமாக இருந்தாலும் எனக்கு தமிழில் அறிமுகமாக ஒரு வாய்ப்பாக எடுத்துக்கிறேன். தொடர்ந்து தமிழ்ல நேரடிப் படங்கள் பண்ணனும்னு ஆசையில் வந்திருக்கேன். கண்டிப்பா பண்ணுவேன், சென்னையில பொறந்த எனக்கு ஹைதாராபாத்துல போய் வாழ்க்கை கெடைச்சது. அந்த காலகட்டத்தை ‘ஹைதராபாத் நாட்கள்’னு சொல்லலாம்.

பொதுவா மூன்று நண்பர்களோட கதைகளை சினிமாவுல பார்த்திருப்போம், ஆனா மூன்று கஸின்ஸ்களோட வாழ்க்கையைப் பார்த்திருக்க மாட்டோம். அதைத்தான் இந்த படம் காட்டப்போகுது, ரொம்ப நல்ல படமா அமையும்” என்றார் இயக்குநர் பாஸ்கர்!

நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா ”போன 2015 ம் வருஷம் பெர்சனலா எனக்கு ரொம்ப சந்தோஷமான வருஷம். ஆனா புரொபெஷனலா அப்படி அமையல. இந்த வருஷம் என்னோட புரொபெஷனல் நல்லபடியா அமையும்னு நெனைக்கிறேன், அப்படிப்பட்ட படங்கள் தான் எனக்கு அமைய ஆரம்பிச்சிருக்கு” என்றார்.

சந்திப்புக்கு வந்திருந்த நடிகர் ராணா ப்ளைட்டைப் பிடிக்க அவசரமாகக் கிளம்ப, அந்த பரபரப்பிலும் பறந்து வந்தது கேள்வி ஒன்று?

”த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? அது இப்போ எப்படியிருக்கு?”

கேள்வியை நின்று கொண்டே எதிர்கொண்ட ராணா மேடையில் இருந்த ஸ்ரீதிவ்யாவையும், பார்வதியையும் கைகாட்டி ”இவங்க ரெண்டு பேரை பத்தி மட்டும் என்கிட்ட கேளுங்க,த்ரிஷாவைப் பத்தி ஆர்யாக்கிட்ட கேளுங்க…” என்று சொல்லிவிட்டு அதே வேகத்தில் எஸ்கேப் ஆனார்.

அதைக்கேட்ட ஆர்யாவோ த்ரிஷா எனக்கு ’தங்கச்சி’  ராணாவுக்கு என்ன உறவுன்னு தெரியல… என்று சொல்லி சிரித்து சமாளித்தார்.

யார் மனசுல யாரோ..? யார் கண்டது?

AryaBangalore Naatkal Press MeetnewsParvathyRanaSri DivyaTrisha
Comments (0)
Add Comment