இப்படத்தின் படப்பிடிப்பு மே 30-ம் தேதி துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி துவக்கி வைத்தார்.
இதில் நடிகர், நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.கே. ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
அரோல் குரோலி இசையில், சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.
களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கே.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.