சாராயக்கடை யாரை திருப்திப்படுத்த?- அமீர்

கொரோனாவின் கோரத்தாண்டவம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு மதுபானக்கடைகளை திறந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் அமீர், “இந்த நேரத்தில் பீடாக்கடைகளையும் சாராயக்கடைகளையும் திறந்திருப்பது யாருக்காக..யாரைத் திருப்திப்படுத்த?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

நேற்று நடிகர் கமல்ஹாசனும் அரசின் இந்தச் செயல்பாட்டுக்காக கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். நல்ல விமர்சனங்களை ஏற்று அதை நடைமுறைப்படுத்து தான் நல்ல அரசாங்கம்? யார் செய்த பிழையோ? யாரிட்ட கட்டளையோ? கொரோனாவோடு போராடும் மக்கள் இனி குடி மக்களோடும் போராடி ஆக வேண்டும்!

ameerDirector Ameer
Comments (0)
Add Comment