தமிழ்சினிமாவில் ஹீரோயின்கள் கோலோச்சுவதெல்லாம் சீஸன் மாதிரி. ஒரு லெவல் வரை எல்லா முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து ஒரு கலக்கு கலக்கி விட்டு அப்படியே ஓய்வெடுக்க கிளம்பி விடுவார்கள்.
இப்போது கீர்த்தி சுரேஷுக்கு சீஸன் போல… இன்றைய தேதியில் தமிழில் விஜய் உட்பட முன்னணி ஹீரோக்களின் ஒரே சாய்ஸ் கீர்த்தி சுரேஷ் தான். அவருடைய தேதி கிடைக்கா விட்டால் தான் அடுத்து ஸ்ரீதிவ்யாவைத் தேடிப்போகிறார்கள்.
அந்தளவுக்கு பிஸியான நடிகையாகி விட்ட கீர்த்திக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படி லேட்டஸ்ட்டாக ட்ரெண்ட்டில் இருப்பதை யோசித்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று தனது சம்பளத்தை கண்ணா பின்னாவென்று உயர்த்தி விட்டாராம்.
ஆமாம், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்கள் டிக் செய்வதால் கீர்த்தி தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.