கட்டிடம் வந்த பிறகு தான் திருமணம் : அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் சபதம்!

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். பொருளாளர் கார்த்தி இராஜஸ்தானிலிருந்து அலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உலக நாயகனும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலரும்மான பத்மஸ்ரீ கமலஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி கட்டிடத்தின் பலகையை திறந்து வைத்தனர். திரு.கமலஹாசன் பேசுகையில், இந்தக் கட்டிடம் நல்ல முறையில் கட்டி முடித்து குறித்த தேதியில் திறக்கப்பட தனது வாழ்த்துக்களையும், ஆசியையும் நாசருக்கும், விஷாலுக்கும் மற்றும் கட்டிட குழுவிற்கும் தெரிவித்தார்.

மேலும், இக்குழுவினர் திறம்பட செயல்படுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். திரு. ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் அனைவருக்கும் தெரிவித்தார். இருவரும் தங்களது திருக்கரங்களால் செங்கலை எடுத்து வைத்து வாழ்த்தினர்.

பொதுச்செயலாளர் விஷால் பேசுகையில், இக்கட்டிடத்தின் கட்டி முடிப்பதே தனது கனவென்றும், அதன்பின் தான் தனக்கு திருமணம் என்றும் சபதம் எடுத்தார்.
தலைவர் நாசர் பேசும்பொழுது, எல்லோருடைய ஆசியோடு இக்கட்டிட பணியை சிறப்பாக முடிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், இம்மாதம் நடக்கவிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கூறினார்.

துணைத் தலைவர் கருணாஸ், இக்கட்டிடத்தின் மூலமாக வரும் நிதி நலிந்த கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகள், மருத்துவ செலவுகள், கல்வி செலவு உட்பட அனைத்து செலவுகளும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படும் என்று கூறினார்.

இக்கட்டிடத்தின் பணிக்காக விஷாலும், கார்த்தியும் சேர்ந்து 10 கோடி தங்கள் சொந்தப் பணத்தில் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இக்கட்டிடம் செப்டம்பர் 2018 – ஆம் ஆண்டு முழுமையாக முடிவடையும் என்று உறுதி அளித்துள்ளனர்.

விழாவில் ‘பத்ம ஸ்ரீ’ கமலஹாசன், ‘பத்ம விபூஷன்’ ரஜினிகாந்த்,சிவகுமார்,விக்ரம், சூர்யா, இயக்குநனர் S.P.முத்துராமன், வரலட்சுமி, சுரேஷ், கமிலா நாசர், சிவகார்த்திகேயன், சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு, ஜெயம்ரவி, பிரகாஷ்ராஜ், விஜயகுமார், கதிர், சத்யராஜ் வைஜெயந்தி மாலா, ஒய்.ஜி மகேந்திரன், சிவகுமார், ஷீலா, லதா, தயாரிப்பாளர் G.K.ரெட்டி, கார்த்திக், கெளதம் கார்த்திக், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரோஜாதேவி, ஹரி, பிரித்தா ஹரி, கேமரா பிரியன், பரத், மீனா, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், விச்சு, சுந்தர்.C, சச்சு அம்மா, மைக் மோகன், கானா உலகநாதன், ஜீவன், லொள்ளு சபா ஜீவா மற்றும் சாமிநாதன், சாம்ஸ், ராமகிருஷ்ணன், மயில்சாமி, கலையரசன், போண்டாமணி, தன்ஷிகா, மகேந்திரன், ஆன்சன், வெண்ணிற ஆடை நிர்மலா, பவன், செந்தில், ஜெயமாலினி, யோகிபாபு, மன்சூர் அலிகான், லிஸ்ஸி, காயத்திரி ரகுராம், ஆரியன், அழகு, M.S.பாஸ்கர், பார்த்திபன், M.N.ராஜம், தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, K.E.ஞானவேல், அபினேஷ், நடிகர் லொள்ளு சபா மனோகர்,விஜய் அன்டனி,சரத் பாபு, ஆதவ் கண்ணதாசன், ராஜ்கிரண், ஆனத்ராஜ், பிந்துமாதவி, உமா ரியாஸ், ஜனகராஜ், ஜீவா, ஹரிஷ், வாணிஸ்ரீ, தயாரிப்பாளர் 2D ராஜா, லிவின்ஸ்டன், அருண் விஜய், பாண்டியராஜன், தயாரிப்பாளர் A.L.அழகப்பன், நடிகர் செந்தில் மனோஜ் பாரதிராஜா, பால சரவணன், மிஸ்கின், சோனா, இயக்குனர் k.s.ரவிக்குமார், நடிகை ஜெயசித்ரா, நடிகர் அசோக், ஹரி குமார், மிருதுளா, இயக்குனர் R.K.செல்வமணி, சஞ்சீவ், சாக்‌ஷி அகர்வால், துளசி, ஜாக்குவார் தங்கம், சிம்ரன், ஆர்த்தி, தம்பி ராமையா, கதிர், ஆடுகளம் நரேன், ஷிரிஷ் மெட்ரோ, அம்பிகா, நடராஜன், முனிஷ்காந்த், கிருஷ்ணா, கிரீஸ், ரேவதி, சர்மிளா மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Kamal HaasanNadigar Sangam New Building's Foundation Laying Ceremony NewsNassarRajinikanthSuriyavishal
Comments (0)
Add Comment