பாலிவுட்டுக்குப் போகும் பா.ரஞ்சித்!

‘காலா’ ரிலீசுக்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது..

தற்போது அந்தக் கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. ஆமாம், அடுத்து தமிழ்ப்படத்தை இயக்கவில்லை. ஹிந்திப்படம் ஒன்றை இயக்கப் போகிறாராம் பா.ரஞ்சித்.

வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமான படமாக தயாராக இருக்கும் இப்படத்தை பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான நமா பிக்சர்ஸ் தயாரிக்கப் போகிறதாம். படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினியை வைத்து கபாலி, காலா என பா.ரஞ்சித் இயக்கிய இரண்டு தமிழ்ப்படங்களும் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அவர் பாலிவுட் பக்கம் போயிருப்பது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

BollywoodDirector Pa RanjithPa.ranjith
Comments (0)
Add Comment