நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், நடனம் தீனா மற்றும் விஜி.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.
த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.