சரத்குமார் – நானியுடன் அமலாபால் இணையும் ‘வேலன் எட்டுத்திக்கும்’

நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் ”வேலன் எட்டுத்திக்கும்” என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், பஞ்சு சுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி, சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

வேலன் எட்டு திக்கும் என்ன மாதிரியான படம்.. கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கும் சமுத்திக்ரகனியிடம் கேட்டோம்..
”இன்று ஊழல் ,லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.

விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ் நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பது கதை. இதில் ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகனை பரவசப் படுத்தும் .

படம் விரைவில் திரைக்கு வரும். படத்தில் சரத்குமாருக்கு வித்தியாசமான வேடமாக பாராட்டப்படும்” என்றார்.

ettuthikkum velanettuthikkum velan movie newsnaniSarath Kumar
Comments (0)
Add Comment