தன்னைச் சுற்றி மட்டுமல்ல, தன்னுடைய நிர்வாணப் படம் இண்டர்நெட்டில் வந்தால் கூட கவலைப்பட மாட்டார் ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே.
அந்தளவுக்கு துணிச்சலான பெண்ணான அவரிடம் சமீபத்தில் சில ரசிகர்கள் சில்மிஷம் செய்ய முற்பட்ட போது திட்டுகளை வாங்கி எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.
சமீபத்தில் நாங்கள் உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு ராதிகா ஆப்தேவுடன் செல்பி எடுக்க கொஞ்சம் ஓவராகவே நெருங்கியிருக்கிறார்கள். உஷாரான ராதிகா எங்க நான் நடிச்ச மூன்று படங்களோட பேர்களை சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்டிருக்கிறார்கள்.
திருவாளர் ரசிகர்கள் திருதிருவென்று முழிக்க, துரத்தியனுப்பியிருக்கிறார். இண்டர்நெட்டுல என்னோட கவர்ச்சியை பார்த்துட்டு போட்டோ எடுக்க வந்தா அது எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என்கிறார் ராதிகா.
துணிச்சல்காரி!