‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சண்முக பாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரை வீரன் திரைப்படத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தே.மு.தி.க கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.
திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.