ஆர்.ஏ ஸ்டூடியோஸ் சார்பாக சி.ஆர்.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார்.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், ‘இறுதிச்சுற்று’ படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது.
படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன், இசை – டர்புகா சிவா, பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி
ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு – நாகூரான், கலை – ராமு, சண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன்