இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ்சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.
மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் ”வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது. அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது ”வெண்ணிலா கபடி குழு 2”.
1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த புரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்று கூறியுள்ளார் இயக்குனர் செல்வசேகரன்.
இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள்.