அன்னதானத்தின் அருமை கூறும் படம் அம்மா உணவகம்

அன்று
‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று பாரதி கண்ட கனவை உண்மையில் இன்று நிறைவேற்றி வருபவை அம்மா உணவகங்கள்தான்.

சென்னையில் பசித்தவர்களின் புகலிடமாக ஆங்காங்கே இருக்கும் அம்மா உணவகங்கள் மாறி இருக்கின்றன.குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அனைவரையும் வரவேற்று வயிற்றுக்கு உணவூட்டிக்கொண்டிருக்கும் தாய்கள் இவை.

சொந்த ஊரைப் பிரிந்து பெருநகரங்களில் வாழும் எத்தனையோ பேருக்கு பசியாற்றும் தாயாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது.

அம்மா உணவகத்தின் பெருமையையும் அது சார்ந்த தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து ‘அம்மா உணவகம்’ என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது .