அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்து இய்க்கும் படம் “அரண்மனை3”. இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
அரண்மனை, அரண்மனை2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அதன் 3ஆம் பாகமான ’அரண்மனை3’ உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுந்தர் சி எழுதி இயக்குகிறார்