பல மொழிகளில் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இதைத் தொடர்ந்து எழில் இயக்கும் இந்தப் புதுப்படத்தை இன்று தொடங்கியிருக்கிறார்கள். இதன் தொடக்க விழா மிகவும் எளிமையான முறையில் கோவில் ஒன்றில் நடைபெற்றது. சி. சத்யா இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.
எழில் படம் என்றாலே காமெடி ஃபார்முலா தான். அப்படித்தான் இந்தப்படமும் முழுநீள காமெடிப்படமாக தயாராகிறது. வருகிற மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.