ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.
இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.
இப்படம் தற்போது 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.
ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.
காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.