‘அழகிய தமிழ் மகள்’ : மாறுபட்ட போட்டி!

Get real time updates directly on you device, subscribe now.

aish

ழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி.

இந்த போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம்.

‘அழகிய தமிழ் மகள்’ மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், ‘வாவ் செலிப்ரேசன்’ இதை, டேக் கேர் இந்தியா, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காகா இயங்கும் நிறுவனத்துடன் இனைந்து போட்டியை வழங்குகிறது.

மூன்று சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit என்னும் வலைதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மறைந்த பத்ம ஸ்ரீ ஆச்சி மனோரமா, ‘அழகிய தமிழ் மகள், உலக தமிழ் பெண்கள் அழகி போட்டியின் லோகோவை அறிமுகப்படுத்தி, அழகு போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த போட்டி பல்லாயிரகணக்கான தமிழர்களை ஒரே பண்பாட்டு தளத்தில் இணைக்க முனைப்பாய் செயல்படுகிறது. கருண் ராமன் ((ஃபேஷன் வடிவமைப்பாளர்) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.