மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான நடிப்பு ஆகியவற்றிற்காக பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த டிரெய்லரால் கவரப்பட்டவர்களில், உணர்ச்சிகரமான மற்றும் சக்திவாய்ந்த கதைகளுக்கு பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவும் ஒருவர். ரசிகர்களின் பாராட்டு குரல்களுடன் இணைந்து, அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீவிரமாக இருக்கிறது!!! தனுஷ் தனது சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றியது போல் உணர்கிறேன்…. வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts
1 of 12

அவரது இந்த பாராட்டு, டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள பரவலான உணர்வை பிரதிபலிக்கிறது; இது அனைவரின் இதயங்களையும் வென்று, எதிர்பார்ப்பை அதிகரித்து, இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.