மகனுக்காக கலங்கும் விஜய் மக்களுக்காக கலங்குவாரா?

“நடிகர் விஜய் கவலையில் இருக்கிறார்” என்ற செய்தி இருநாளாக றெக்கைக் கட்டிப் பறந்து வருகின்றன. காரணம் என்னவென்றால் விஜய்யின் மகன் கனடா நாட்டில் இருக்கிறார். அதனால் விஜய் அவரை எண்ணி வருத்தப்படுகிறாராம். பட் இன்னைக்குள்ள செய்தி என்னவென்றால் விஜய்யின் மகன் மிக பாதுகாப்பாக இருக்கிறார் என்பது தான். கிரேட்!
இந்நேரத்தில் தான் மகனுக்காக கலங்கும் விஜய் ஏன் இன்னும் நம் மக்களுக்காக கலங்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது. பசிக்கும் போது கொடுத்தால் தானே உணவுக்கு மரியாதை. அவரைச் செய்யச் சொல்லி நாம் போர்ஸ் செய்யவில்லை. “என் பசங்களுக்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்” என்ற பன்ச் அவருடையது என்பதை மட்டும் நினைவுப் படுத்துகிறோம்!