அப்துல்கலாமின் கனவை நினைவாக்கும் ‘நாளைய இந்தியா’

கலாம் ஐயா அவர்களின் கனவை நினைவாக்க தமிழக இளைஞர்கள் எடுக்கும் முதல் முயற்சியாக நாளைய இந்தியா மற்றும் கலாம் நண்பர்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் “கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்” பற்றிய விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை கடற்கரை கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரையிலும் கலை நிகழ்ச்சிகளும் மருத்துவருடன் மக்கள் கலந்துரையாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இராணி மேரி கல்லூரிலும் நடைபெற்றது.