”கூட்டம், கைத்தட்டல்களை பார்த்து ஏமாந்துறாதீங்க..” – ஹூரோக்களை எச்சரித்த ராதாரவி

Get real time updates directly on you device, subscribe now.

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப பெண்கள் வரை அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள ‘கொரில்லா’ திரைப்படம்.

பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.

சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசியதாவது, “என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன்.

Related Posts
1 of 151

மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள்.

படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன் யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்”

இன்னைக்கு எல்லோருக்குமே சந்தோஷமா நாள். எல்லா கட்சிக்காரணும் சந்தோஷமா வெடி வெடிக்கிறான். வெற்றின்னு கொண்டாடுறான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்றான். ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சிக்கங்க. கை தட்டுறாங்கன்னு நெனைச்சு ஏமாந்திறாதீங்க, பெருசா கூட்டம் கூடும் அதையும் நம்பி ஏமாந்திறாதீங்க. கூட்டம் கூடி கைதட்டி ரசிச்சாம்னா டெபாசிட் போயிடும்” என்றார்.