சிக்மா பங்ஷனில் ஜேசன் சஞ்சய் பேசியது என்ன?
சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக சமீபத்தில் நடைபெற்றது. விழாவில்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசும்போது, “நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். ‘சிக்மா’ படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு தேவை, சிக்கல் இருக்கும். அப்போது அவர்கள் எடுக்கும் ஒரு முடிவால் அவர்கள் வாழ்க்கையே மாறுவதுதான் ‘சிக்மா’. இது என்னுடைய முதல் படம் என்பதால் எப்போதுமே ஸ்பெஷல். இந்த படத்தின் கதையை லைகா புரொடக்க்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாரிடம் சொன்னபோது எனக்கு 22 வயது. அந்த வயதில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அடுத்ததாக, தயாரிப்பாளராக தமிழ்குமரன் சாரிடம் கதை சொன்னதும், இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்து ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. சந்தீப் என்னுடைய முதல் பட ஹீரோ. திறமையானவர். இந்த படம் அவருடைய கரியரில் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். ஃபரியாவுக்கு தமிழில் இதுதான் முதல் படம். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும் இவருடைய நிஜ கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அந்த அளவுக்கு நேர்மையானவர், சுதந்திரமானவர். அவருக்கு தமிழில் இந்த படம் நிச்சயம் நல்ல வரவேற்பு கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

நடிகர்கள் ராஜூ சுந்தரம் மாஸ்டர் சம்பத் மற்றும் என்னுடைய தொழில்நுட்ப குழுவினர் எடிட்டர் பிரவீன் சார், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் சார், அனுஷா, இசையமைப்பாளர் தமன், என்னுடைய சித்தப்பா சஞ்சீவ் சார் என சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. தமன் இசையில் யுவன் சங்கர் ராஜா சார், சந்தோஷ் நாராயணன் சார், ஷான் ரோல்டன் பாடல் பாடியிருப்பது எனக்கு மகிழ்ச்சி. துல்கர் சல்மான் சார், ராஜமெளலி சார், பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் சூரி சார் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய அம்மா, அப்பா, தங்கை திவ்யா எல்லோருக்கும் நன்றி. படம் அக்டோபர் 2 திரையரங்குகளில் வெளியாகிறது”.