சலுகைக்கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே புதிய முயற்சி

Get real time updates directly on you device, subscribe now.

CYMERA_20150307_211608
புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் எல்லாம் அவன்செயல் என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி என் வழி தனி வழி என்று பயணிப்போர் இன்னொரு ரகம்.இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் நடிகர் ஆர்கே. திரையுலகில் விடாமுயற்சியால் தனக்கான ஓர் இடத்தைத் தேடிப்பிடித்து அடைந்திருப்பவர்..எதிலும் தனித்து வெளிப்பட விரும்புகிற அவர்,  வியாபாரம் தொடர்பாகவும் , சுயமுன்னேற்றும் சார்ந்தும் தன்னம்பிக்கை கருத்துக்களை பல்வேறு கூட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர் .

தனது ‘வாங்க சாப்பிடலாம்’ ஓட்டலில் சினிமா தொடர்பானவர்கள் சங்க உறுப்பினர் கார்டுடன் சாப்பிட வருகிறவர்களுக்கு  உணவு விலையில் 10 சத விகித சலுகை வழங்கினார்.

 அண்மையில் தன் ‘என்வழி தனி வழி’ படத்தின் ட்ரெய்லரை வெளியிடும்போது கூட ஒரு புதுமை செய்தார். பட விளம்பரம் வந்த செய்தித்தாளில் அந்த விளம்பரத்தின் மீது மொபைல் போனைக்காட்டி  க்ளிக் செய்தால் போதும்  ட்ரெய்லர் தெரியும். அது இந்தியாவில் முதல் முயற்சி என்று பேசப் பட்டது ; பாராட்டப்பட்டது

இப்போது ‘என் வழி தனி வழி’ படம் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு சலுகைக் கூப்பனை வெளியிட்டு இப்போது ஒரு புதுமை செய்து இருக்கிறார் ஆர்.கே. இந்தக் கூப்பன்கள் படம் வெளியாகியுள்ள எல்லா திரையரங்கு வாசலிலும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்ற கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைத்துக் கொள்வார்கள். அதாவது டிக்கெட்100 ரூபாய் என்றால் 90 ரூபாய் போதும்.

ரசிகர்களுக்கு ஆர்கே வழங்கும் சலுகைக் கட்டணத்தில் மீதமாகும் பணத்தில் நொறுக்குத் தீனியையும்  வாங்கிவிட முடியுமே. ரசித்து மகிழ ஒரு படமும் உண்டு,கூடவே கொறித்து மகிழ ஒரு சலுகையும் உள்ளது. சபாஷ்!

மற்ற நடிகர்களைப் போலில்லை ஆர்கே என்பதும்  அவர் சொல்வது செய்வது எல்லாமே ‘என் வழி தனி வழி’  ‘ என்பதும் இப்போது புரியுமே