சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள “ஆட்டி” !

Get real time updates directly on you device, subscribe now.

சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

“எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும், அதைக் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.

சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஜூன் 12-ஆம் தேதி ‘ஆட்டி’ படம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தும் தனது சினிமா, அரசியல் மற்றும் வியாபார பயணங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் இசக்கி கார்வண்ணன்.