கரு.பழனியப்பன் ஜோடியானார் டெல்லி தமிழ்ப்பெண் நிகிதா!

இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நாயகனாக நடிக்கும் ‘கள்ளன்’ படத்தின் படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புதுடில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் நமோ நாராயணன், சௌந்தர் ராஜா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர். ரம்யா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கொச்சினில் ஆரம்பித்த படப்பிடிப்பு தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.