இப்படியும் உதவலாம் நிக்கி கல்ராணியின் புதிய முயற்சி

அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மோசமான உயிர்க்கொல்லி பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்கப் பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். நமக்கு அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கிறது என்றால் நாம் அதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும்.
வாழ்க்கை நிலையற்றது. இந்த நிலையற்ற வாழ்வில் நாம் நமக்குக் கிடைத்த வளங்களுக்கு நன்றியுடையவர்களாகவும் தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
நான் எப்போதுமே எளிமையாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் குறைவானதே நிறைவு. எனது இந்தக் கொள்கை எனது ஆடைகளுக்கும் பொருந்தும். இருப்பினும், பலரைப் போல் காலப்போக்கில் எனது தேவைகளை மிஞ்சி எனது உடைமைகள் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன்.
அதனால் எனது தேவையைத் தாண்டி இருப்பவற்றை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறேன்.
என்னைப் போல், எத்தனை பேர் உங்கள் வீட்டில் உங்களின் தேவையைத் தாண்டியும் பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களின் அலமாரியில் எத்தனை பேர் பலவருடங்களாக அணியாத துணிகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். இப்படி உபயோகிக்காமல் தேவைக்கு மிஞ்சியிருக்கும் நம் உடைமைகளை ஒரு நல்ல காரியத்திற்கு உதவ உபயோகிப்பதே சிறப்பான வழி எனக் கருதுகிறேன்.