பா. ரஞ்சித் ஆக்ஷன், கட் சொல்ல இனிதே தொடங்கியது ‘பற’ படப்பிடிப்பு!

‘கலிங்கா’ என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் “பற”
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர். முன்னனி நடிகர்களும் நடிக்கயுள்ளனர்.
முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
ஔிப்பதிவு; சிபின் சிவன், இசை; ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள்; உமா தேவி, சினேகன், எடிட்டிங்; சாபு ஜோசப், கலை; மகேஷ், தயாரிப்பு மேற்பார்வை; சிவசங்கர், இணை தயாரிப்பு; எஸ்.பி. முகிலன், தயாரிப்பு; பெவின்ஸ் பால், ரிஷி கணேஷ்