பிரபுதேவா படத்திற்காக சங்கர் மகாதேவனை பாட வைத்த அம்ரீஷ்

Get real time updates directly on you device, subscribe now.

amresh ganesh

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கனும்’’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “எங் மங் சங்’’ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே பாலாஜி,பாகுபலி பிரபாகர் (கலக்கேயா), கும்கி அஸ்வின், மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எம்.எஸ்.அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார்.

Related Posts
1 of 7

இந்த படத்தில் இடம் பெறும் பாடலான

“அய்யனாரா வந்துட்டாங்க
இங்க பாரு
காவல் தெய்வமா
மூணு பேரு”

பிரபுதேவா முதல் முறையாக எழுதியிருக்கும் இந்த பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர் மகாதேவன் பாட சமீபத்தில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. பாடலை பாடி முடித்த சங்கர்மகாதேவன் உடனடியாக பிரபுதேவாவுக்கு போன் செய்தார். சூப்பர் ஹிட்டாகக் கூடிய இந்த பாடலை நீங்க எழுதி இருக்கீங்கன்னு அம்ரீஷ் சொன்னார்..இந்த பாட்டு நிச்சயம் எல்லா இடத்திலும் ஒலிக்கும். வாழ்த்துக்கள் என்று பிரபு தேவாவை வாழ்த்தியதோடு இல்லாமல் இசையமைப்பாளர் அம்ரீஷையும் பாராட்டினார்.