கேரள மக்களுக்கு நிதி உதவி செய்த சூர்யா, கார்த்தி

Get real time updates directly on you device, subscribe now.

கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது.

கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதி அளித்து உதவுமாறு கேரளா முதல்வர் பிணரயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.

Related Posts
1 of 54

எப்பொழுதும் சூர்யா கார்த்திக்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

”கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம் வருந்துகிறோம், வெகு விரைவில் இயல்பு நிலை திரும்ப பிராதிக்கிறோம்”. என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.