சீனாவிற்கு எதிராக சாக்‌ஷி அகர்வால் எடுத்த அதிர்ச்சி முடிவு

Get real time updates directly on you device, subscribe now.


சிலநேரம் சீரியசான விஷயங்களை காமெடியாக்குவதற்காகவே சில பிரபலங்கள் களமிறங்குவார்கள். கைத்தட்டல், விளக்கு ஏற்றுதல், பூக்கள் தூவுதல் என நம்நாடு கோரோனாவிற்கு எதிராக பல விசயங்களை செய்து வரும் நிலையில் சீனாவின் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு விசயத்தைச் செய்து கலவரத்தை ஜாலி நிலவரமாக மாற்றியுள்ளார் நடிகை சாக்‌ஷு. இதோ அது சம்பந்தப்பட்ட நியூஸ்..

இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.

செம்மல்ல!