கலக்கிய கமல் ரசிகர்கள்!

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய கமல் வருடத்திற்கு நான்குமுறை தன் கட்சியினர் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். அதன்படி மே 1-ஆம் தேதியான நேற்று கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். கொரோனா காரணமாக அது தடைபட்டு விட்டது.
இந்நிலையில் கிராமசபை கூட்டத்திற்காக குறிக்கப்பட்ட நாளில் கொரோனா நிவாரணம் வழங்க செலவழிக்கலாம் என முடிவெடுத்த கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யத்தினர் நேற்று மட்டும் ஒரு லட்சம் பேர்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்தி இருக்கிறார்கள். மத்திய மாநிக அரசியல் கட்சிகளை தாறுமாறாக ட்விட்டரில் விமர்சித்தாலும் தன் ரசிகர்களை இப்படியான பணிகளிலும் ஈடுபட வைத்திருப்பது சிறப்பு