உதயநிதியுடன் ஜோடி சேரும் இரண்டு ஏஞ்சல்கள்!
‘ஏபிசிடி’, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஓ. எஸ்.டி ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’.
‘தொட்டா சிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘ஆர்.எக்ஸ்’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.
”உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் ‘ரொமான்டிக் ஹாரர்’ ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.