‘தயாரிப்பாளரின் இயக்குநர்’ : இப்படி ஒரு பேரு கெடைக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்!

Get real time updates directly on you device, subscribe now.

shatyaraj

‘பர்மா’ பட இயக்குநர் தரணிதரன் தனது ரெண்டாவது படமாக இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”.

இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குநர் தரணி தரன். ”ஜாக்சன் துரை” படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் எம்.எஸ்.சரவணன் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது.

Related Posts
1 of 10

பர்மா மற்றும் ஜாக்சன் துரை ஆகிய இரண்டு படங்களையும் இயக்குனர் 35 நாட்களில் முடித்துள்ளதால் தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பெருந்தொகைக்கு ”ஜாக்சன் துரை” படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை “தேனாண்டாள் பிலிம்ஸ்” வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பிரமாண்டமான “ஜாக்சன் துரை” படத்தை திரையில் காணலாம்.