கேப்பே விடாமல் திட்டிய ரசிகர்கள் : ட்விட்டரிலிருந்து வெளியேறினார் த்ரிஷா!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதில் ”பீட்டா” என்கிற பன்னாட்டு அமைப்புக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
இதனால் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நட்சத்திரங்களுக்கும் தமிழக ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
முன்னதாக ஆர்யா, விஷால், தனுஷ் போன்ற தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலர் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஆதரவாளராக மாறி விட்டார்கள்.
ஆனால் நடிகை த்ரிஷா மட்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கொந்தளித்துப் போய் அவரை மோசமான வார்த்தைகளால் மீம்ஸ் ஒன்றை கிரியேட் செய்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டார்கள். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா அமைதியாக இல்லாமல் எரியும் நெருப்பில் எக்ஸ்ட்ரா ஐந்து லிட்டர் எண்ணையை ஊற்றியதைப் போல தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி கொஞ்சம் ஓவராகவே தனது ட்விட்டரில் கமெண்ட் அடித்தார்.
அவ்வளவு தான் கொந்தளித்து விட்டார்கள் ரசிகர்கள்.
”தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியும், அதன் கன்னியத்தைப் பற்றியும் யாரெல்லாம் பேச வேண்டுமென்கிற வெவஸ்தையே இல்லை” என்கிற லைட்டான கமெண்ட்டில் ஆரம்பித்து எழுத்தில் ஏற்ற முடியாத வார்த்தைகள் வரை த்ரிஷாவை வசை பாட ஆரம்பித்து விட்டார்கள்.
கொத்து கொத்தாக ரசிகர்கள் கிளம்பி வந்து அடித்த கமெண்ட்டில் தாக்குப் பிடிக்க முடியாமலும், சரியான பதிலடி கொடுக்க முடியாமலும் திணறிய த்ரிஷா இப்போது ட்விட்டரை விட்டே வெளியேறி விட்டார்.