பிரசன்னா பால் போட… சினேகா பேட்டிங் செய்ய… : நெகிழ வைத்த கிரிக்கெட் போட்டி!

Get real time updates directly on you device, subscribe now.

sneha

‘ஸ்டூடியோ 9′ நிறுவனத்தின் மூலம் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செய்தவர். நாசர் அலி. தற்போது Naro Media என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிறுவனம் சார்பில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் “Just Cricket ” எனும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.
இந்த போட்டியில் சென்னையை சார்ந்த 32 அணிகள் கலந்து கொண்டனர்.

இதனால் வரும் நிதியானது ஹெச்.ஐ.வி னால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்கும். மருத்துவ செலவுக்கும். வழங்கப்படுகிறது.

நவம்பர் 27ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று தொடங்கிய இந்த போட்டியானது சென்ற வாரம் டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.. இதன் இறுதிப் போட்டியானது நேற்று டிசம்பர் 11- ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. .

இதில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் மற்றும் இயக்குனர்கள் வி.இசட். துரை, மீரா கதிரவன் போன்றோரும் நடிகர்கள் ஷாம்,பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், ப்ரஜன், கோலிசோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா க்ரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தியா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் “சென்னை 600028 பார்ட் 2″ படக்குழுவும், ”பழைய வண்ணாரப்பேட்டை” படக்குழுவும், ”விழித்திரு” படக்குழுவும் வருகை தந்து போட்டியை உற்சாகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள் பாடிய பாடலுக்கு கண்கலங்கி ஆறுதல் கூறினார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600028 படக்குழுவும் வெற்றி பெற்ற எப் சி சி அணியோடு கிரிக்கெட் விளையாடியாடினார். அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூபாய் 25,000/- க்கான முதல் பரிசை வழங்கினர். இரண்டாம் பரிசை சீ ஹார்ஸ் அணியும் தட்டிச் சென்றது. அவர்களுக்கு 15,000/- ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

நடிகர் பிரசன்னா குழந்தைகளிடையே பேசும்போது இங்கே யாருடைய வாழ்வும் நிரந்தரம் அல்ல. இருக்கும் வரை சந்தோசமாக வாழ்வோம். நீங்கள் யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்றபோது குழந்தைகள் அனைவரும் இளகினர். மொத்தத்தில் இந்நிகழ்வு நட்சத்திரங்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஒரு உருக்கமான நிகழ்வாக அமைந்தது.