”மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்” – புதுமுக நடிகர் குமுறல்
மிஸ்கின் இயக்கப் போகும் ‘சைக்கோ’ படத்தின் கதை எனக்காக உருவாக்கப்பட்டது என்று குமுறுகிறார் புதுமுக நடிகர் மைத்ரேயன்.
பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கான ஆரம்பகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.