இணையதளத்தின் ஆபத்துகளை மூன்று மொழிகளில் படம் பிடித்துக் காட்டும் ‘நிக்கிரகன்’

Get real time updates directly on you device, subscribe now.

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தயாராகும் திரைப்படம் ‘நிக்கிரகன்’.

இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக, ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது.

இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள்? என்பதே இப்படத்தின் கதைக்களமாம்.

Related Posts
1 of 134

நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து இப்படத்தை இயக்கி வருகிறார் நஸ்ரேன் சாம்.

அரவிந்த் ஜே ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள, இசையமைப்பாளராக சனாதன் அறிமுகமாகிறார்.