‘ஒற்றைப் பனை மரம்’ டீசரை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

Get real time updates directly on you device, subscribe now.

ர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனை மரம்’.

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும், தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக்கும் இவர், இதற்கு முன் ‘நேற்று இன்று’, ‘இரவும் பகலும் வரும்’, ‘போக்கிரி மன்னன்’ ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

Related Posts
1 of 147

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டார். அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.