‘பரியேறும் பெருமாள்’ கன்னட ரீமேக்கில் ஹீரோவாகும் ஏ.வி.எம் மருமகன்!

Get real time updates directly on you device, subscribe now.

ந்த ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டையும், திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வாங்கிக் குவித்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப்படம் இப்பொழுது கன்னட மொழியில் ரீமேக் ஆகிறது.

இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும் தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் இயக்குனர் காந்தி மணிவாசகம் இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று பல புதுமுக நடிகர்களை தேடி இறுதியாக ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன் மைத்ரேயா என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.

Related Posts
1 of 136

இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.

விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.