பைனான்ஸ் சிக்கலில் ‘கருடா’? : ஹரியுடன் கை கோர்த்தார் விக்ரம்
முதல்முறையாக தானே விருப்பப்பட்டு ‘இருமுகன்’ படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் சீயான் விக்ரம்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தை முடித்த கையோடு விக்ரம் ஏற்கனவே கமிட்டாகியிருந்த ‘கருடா’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார்.
காஜல் அகர்வால் நாயகியாக கமிட்டான இந்தப்படம் இப்போது பைனான்ஸ் சிக்கலை சந்தித்திருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பு தாமதப்பட்டிருக்கிறது. அதோடு அஜித் ஜோடியாக ‘ஏ.கே 57’ படத்தில் கமிட்டாகியிருக்கும் காஜல் அகர்வாலும் அந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டார் ஆக இந்த இரு காரணங்களினாலும் கருடா படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.
இதற்கிடையே தனது ஆஸ்த்தான இயக்குநரான ஹரியுடன் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் விக்ரம்.
‘இருமுகன்’ படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஷிபுதமீம்ஸ் தான் சாமி 2-ம் பாகத்தையும் தயாரிக்கப்போகிறார்.
பிரியனின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை என பட வேலைகளை பரபரப்பாக ஆரம்பித்து விட்டார் ஹரி.
அனேகமாக கருடாவுக்கு முன்பே சாமி 2 ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.