இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார்!

Get real time updates directly on you device, subscribe now.

கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் சசிகுமாருக்கு அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள்.

அப்படி ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக தயாராகும் புதுப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’, ‘வன்மம்’, ‘மாப்பிள்ளை’, ‘டிக் டிக் டிக்’ உட்பட பல படங்களை தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் இப்படத்தை தயாரிக்கிறார்.

பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில் சசிகுமார் உடன் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்.

Related Posts
1 of 140

மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.