ரஜினி – தனுஷ் – அனிருத்துடன் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய செளந்தர்யா!
ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 -ம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015- ம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி மகன் பிறந்தார். அவருக்கு ரஜினி வேத் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு செளந்தர்யா- அஸ்வின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
தற்போது மகன் வேத் உடன் அப்பா வீட்டில் தனியாக வசித்து வரும் செளந்தர்யா நேற்று மே 6-ம் தேதி தனது மகன் வேத்தின் இரண்டாவது பிறந்த நாளை
அப்பா ரஜினி – அம்மா லதா ரஜினிகாந்த் ஆகியோருடன் அவர்களது வீட்டில் கொண்டாடினார்.
இந்த பிறந்த நாள் விழாவில் அக்கா ஐஸ்வர்யா, அவரது கணவரும் நடிகருமான தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.