இரு மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் ‘டாக்ஸிக்’!

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக ‘டாக்ஸிக் ‘ என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும்.

Related Posts
1 of 4

சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கிய, ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ – பல்வேறு கலாச்சார ரீதியிலான கதை சொல்லலை மறு வரையறை செய்ய தயாராக உள்ளது. ஆங்கிலம் – கன்னடம் என இரு மொழிகளிலும் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகளாவிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. கன்னடம் – இந்திய பார்வையாளர்களுக்கான நுணுக்கங்களை படப்பிடிக்கிறது. அதே தருணத்தில் ஆங்கிலம் – உலகளாவிய பார்வையாளர்களின் அணுகு முறையை உறுதி செய்கிறது. இது திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பகத் தன்மை மற்றும் பன்முக தன்மை கொண்டு அணுகி இருப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை- இந்தியாவிலும், உலக அளவில் உள்ள பார்வையாளர்களுடன் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும். கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தை உறுதி செய்கிறது. டாக்ஸிக் – கலை பார்வை மற்றும் வணிக ரீதியிலான கதை சொல்லலின் துல்லியத்தை ஆராய்கிறது. இது நிலவியல் எல்லைகள்- மொழிகள் மற்றும் கலாச்சார வரம்புகளையும் எல்லாம் கடந்து உலகெங்கிலும் உள்ள இதயங்களுடனும், மனங்களுடனும் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பயணம்” என்றார்.