சீயான் விக்ரமுடன் இணையும் பா.இரஞ்சித்!

தற்போது இயக்குநர் பா.இரஞ்சித். காளிதாஸ் , துஷாரா, கலையரசன் , ஹரி நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். இறுதிக்கட்டபடப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இன்னிலையில் சீயான் விக்ரமுடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.விரைவில் இப்படத்தின் தொழில் நுட்பகலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் .