”தமிழ் பேசும் கதாநாயகிகள் தான் தமிழ்சினிமாவுக்கு தேவை” – அதர்வா விருப்பம்
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘பூமராங்’.
‘அர்ஜூன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையொட்டி படம் பற்றி நாயகன் அதர்வா பேசியதாவது, ”படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு மிக வேகமாக முடித்து விட்டோம்.
‘பூமராங்’ என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்.
ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த ‘பூமராங்’ வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன்” என்றார்.