வசூலில் சாதனை படைக்கும் துரந்தர்!

Get real time updates directly on you device, subscribe now.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது.

உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.

பிரம்மாண்டமான ஓப்பனிங் மற்றும் சாதனை படைத்த இரண்டாவது வார இறுதிக்கு பிறகு, 2-வது வாரத்தின் வேலை நாட்களிலும் (திங்கள் முதல் வியாழன் வரை) படம் மிக வலுவாக நின்றது. இந்தியா மற்றும் முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்து குறிப்பிடத்தக்க வசூலை குவித்துள்ளது.