”எனை சுடும் பனி”யில் சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கும் பாக்யராஜ்

Get real time updates directly on you device, subscribe now.

ஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “எனை சுடும் பனி” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய ”டீ கடை பெஞ்ச்” படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா” படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதாநாயகனாக உயர்வு பெறுகிறார். கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்.

கதாநாயகிகளாக உபாசனா ஆர்.சி, சுமா பூஜாரி நடிக்கிறார்கள். மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா.

படத்தின் துவக்க விழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது.

Related Posts
1 of 134

படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்.. ”சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.

அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம்.

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதும் படத்தின் சுவாரஸ்யம்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது” என்றார் இயக்குனர்.