‘பாலிவுட்’ ஆசையால் வந்த வினை : சான்ஸ் தேடி அலைகிறார் இலியானா!
முன்பெல்லாம் ஹீரோக்களுக்கு மட்டும் தான் கோடிகளில் சம்பளம் கிடைத்து வந்தது. இப்போதோ நயன் தாரா மாதிரியான முன்னணி நடிகைகளும் ஹீரோக்களுக்கு நிகராக கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களுக்கும் பிசினஸ் இருப்பதால் தயாரிப்பாளர்களும் தரத் தயங்குவதில்லை. நயன்தாரா மாதிரியே அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா என முன்னணி நடிகைகள் பலரும் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லிஸ்ட்டில் இருந்து வந்த இலியானாவின் நிலைமையோ பரிதாபமாகிக் கிடக்கிறது. தமிழில் விஜய்யுடன் நடித்த நண்பன் படம் மெகாஹிட்டாகியும் ஹிந்திப் படங்களில் நடிக்கும் ஆசையில் தேடி வந்த படங்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு பாலிவுட்டுக்குப் போனார்.
அங்கோ எதிர்பார்த்த எண்ணிக்கையில் பட வாய்ப்புகள் அமையவில்லை. அதோடு அவர் எதிர்பார்த்த சம்பளமும் அங்கு கிடைக்கவில்லை.
நொந்து போன இலியான கடந்த சில மாதங்களாக தெலுங்கு, தமிழில் புதுப்பட வாய்ப்புகளை கேட்டு வருகிறார்.
வாய்ப்பு இல்லாத நேரத்திலும் கூட கோடியில் சம்பளம் கேட்டதால் பல தயாரிப்பாளர்கள் பின்வாங்க வேறு வழியில்லாமல் தனது சம்பளத்தை 50 லட்சமாக குறைத்திருக்கிறாராம் இலியானா.
ஆமாம், 50 லட்சத்தோடு போனால் இலியானாவை உங்கள் படத்தில் நாயகியாக கமிட் செய்து விட்டு வரலாம்.