மூன்று ஹீரோக்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் புதியபடம் ஒன்றை தயாரிக்கின்றார்.
‘இறைவி’ எனபெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை பிட்சா, ஜிகர்தண்டா வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
முதன்முறையாக விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபிசிம்ஹா இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று சென்னையில் ஆரம்பமானது. எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா நடித்த காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.